புதுதில்லி, ஆக.17- புதுதில்லியிலிருந்து 22.48 டன் அத்தியாவசிய மருந்துகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக புது தில்லி கேரள ஹவுசின் சிறப்பு அதிகாரி டாக்டர் ஏ.சம்பத் தெரிவித்தார். சதீஸ்கர் மற்றும் போபாலில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் வந்துள்ள மருந்துகள் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இதில் நுண்ணுயில் எதிர்ப்பி கள் (ஆன்டி பயாடிக்ஸ்). இன்சுலின் போன்ற அத்தியா வசிய மருந்துகள் உள்ளதாக வும் அவர் செய்தியாளர்களி டம் கூறினார். மத்திய சுகாதாரம்- குடும்ப நல அமைச்சகம் கேர ளத்தின் கோரிக்கையை ஏற்று மருந்துகள் வழங்கியுள்ளது. இதில் மூன்று டன் எடை யுள்ள இன்சுலின் போன் றவை உள்ளன. 400 அட்டைப் பெட்டிகளில் உள்ள இந்த மருந்துகள் தினமும் ஆறு டன் வீதம் விமானம் மூல மாக கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.